search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம கும்பல்"

    • ரூ.10 ஆயிரத்து 400 மற்றும் செல்போன் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்தனர்.
    • கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியில் பரபரப்பான மாலை வேளையில் வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 மர்மநபர்களால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு எப்போதும் பரபரப்பான சாலையாகும். இந்த சாலையில் எந்நேரமும் வாகன போக்குவரத்தும், உழவர் சந்தை மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும் சாலையில் இருபுறமும் ஏராளமான நகர்கள் உள்ளதால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் அமைந்துள்ளன.

    இதனால் பொதுமக்கள் அடிக்கடி கடைத்தெருவிற்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் இப்பகுதியில் ஒரு சி நபர்கள் கடைத்தெரு மற்றும் கடைகளுக்கு வரும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் பணத்தை பறித்து செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் நாஞ்சிக்கோட்டை சாலையில் பல வங்கிகளின் ஏ.டி.எம்.களும் அமைந்துள்ளன. இந்த ஏ.டி.எம்.களின் அருகிலும், எதிரிலும் ஒரு சிலர் அமர்ந்து கொண்டு பணம் எடுக்க வருவோரை கண்காணித்து பணத்தை பறித்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இவ்வாறு பாதிக்கப்படும் பலரும் இதுபற்றி போலீசில் உரிய புகார்கள் அளிப்பதில்லை. இதனால் இந்த மர்ம கும்பலுக்கு இது வசதியாக போய் விடுகிறது.

    இந்த மர்மநபர்கள் கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையாகி கிடப்பதால் பணம் இல்லாதபோது இதுபோன்ற வழிப்பறியில் அடிக்கடி ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு சண்முகாநகரை சேர்ந்தவர் ராமச்சந்திர மூர்த்தி. இவரது மகன் ஞானசேகரன் ( வயது 44). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்டராக உள்ளார்.

    இந்த நிலையில் இவர் நேற்று மாலை நாஞ்சிக்கோட்டை சாலை பர்வீன் தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் 3 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஞானசேகரனை வழி மறித்து நிறுத்தினர்.

    திடீரென அவர்கள் ஞானசேகரனின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டினர். இதற்கு அவர் கொடுக்க மறுத்தார். உடனடியாக அந்த மர்ம நபர்கள் ஞானசேகரன் சட்டை பாக்கெட், பேண்ட் பாக்கெட்டில் சோதனை செய்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்து 400 மற்றும் செல்போன் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்தனர்.

    கழுத்தில் கத்தியை வைத்து இருந்ததால் ஞானசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இதை அடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது,தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் இது போன்ற வழிப்பறி சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் பணம் பறிக்கின்றனர்.

    பெண்கள் நடந்து சென்றால் அவர்களின் நகைகளை பறிக்கின்றனர். வாகனத்தில் செல்பவர்களையும் அவர்கள் விடுவதில்லை. இதனால் சாலையில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றோம்.

    எனவே இந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அடிக்கடி போலீசார் ரோந்து செல்ல வேண்டும். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.

    • கோட்டகுப்பம் அருகே பெரிய முதலியார் சாவடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சொந்தமான கொடி கம்பம் உள்ளது.
    • அந்த வழியாக சென்ற விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே பெரிய முதலியார் சாவடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சொந்தமான கொடி கம்பம் உள்ளது. நேற்று இரவு இந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் இந்த கொடி கம்பத்தை வெட்டி பின்புறம் உள்ள காலி மனையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்ற விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சுமார் 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பெரியமுதலியார் சாவடியில் ஒன்று திரண்டனர். அவர்கள் கொடிக்கம்பத்தை வெட்டி வீசிய நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் டிஎஸ்பி மித்ரன் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்வோம் என்று கூறியதின் பெயரில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையோர கோட்டகுப்பம் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பெரிய முதலியார் சாவடியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்திய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது.
    • மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே ஆடுர்குப்பம் சேர்ந்தவர் 15 வயது மாணவன். இவர் கடலூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது. இதனால் இரு மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.

    அதனை தொடர்ந்து மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோத காரணமாக கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு அரசு பஸ்சில் 9-ம் வகுப்பு மாணவன் செல்லும்போது அடையாளம் தெரியாத 8 நபர்கள் அரசு பஸ்ருசில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த 9-ம் வகுப்பு மாணவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 8 நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • நூதன முறையில் கார் மூலம் மர்ம கும்பலால் ஆடுகள் கடத்தப்பட்டன.
    • கொட்டகை அமைத்து 20 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே கீழ் தனியாலம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குப்பு (வயது 60). இவர் அதே பகுதியில் இவரது  வீட்டில் கொட்டகை அமைத்து 20 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு தனது வீட்டில் உள்ள கொட்டகையில் கட்டி விட்டு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் காரில் அங்கு வந்த மர்ம கும்பல் ஆட்டுக்கயிறு கத்தியால் அறுத்து சுமார் 11 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர்.

    • சமையலறையில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.
    • 3 தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களாக மத்திய சிறைச்சாலை தீவிர சோதனையில் செல்போன், சார்ஜர் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்தார். மேலும் கைதிகளை கடும் எச்சரிக்கை செய்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். நேற்று அதிகாலை மணிகண்டன் வீட்டில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறைத்துறை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், டெல்டா பிரிவு உள்ளிட்ட 3 தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் யாரேனும் கூலிப்படை ஏவி இந்த சம்பவத்தில் ஈடுபட வைத்தார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் பகுதியில் கூலிப்படையினர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து விசாரணை செய்ய விரைந்துள்ளனர்.

    • விழுப்புரத்தில் பரபரப்பு நகை வியாபாரி காருக்கு மர்ம கும்பல் தீ வைத்தனர்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்மமான முறையில் எரிவதை கண்டு குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் தீயை போராடி அணைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திருவாமாத்தூர் சானந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 38). இவர் விழுப்புரத்தில் தங்க நகை செய்து விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் தனது காரில் வெளியூருக்கு சென்று விட்டு இரவு வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் தூங்கச் சென்றார். நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்கு வந்து காருக்கு தீ வைத்து விட்டு சென்றனர். தீ லேசாக எரிய தொடங்கி மளமளவென பயங்கரமாக எரிந்தது. 

    அப்போது திடீரென்று வீட்டின் வெளியே தீப்பற்றி எரிவதை அறிந்த குமாரசாமி திடுக்கிட்டு எழுந்து வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்மமான முறையில் எரிவதை கண்டு குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் தீயை போராடி அணைத்தார். இந்த விபத்தில் காரின் முன் பக்கம் முழுவதும் தீக்கிரையானது. மேலும் இது குறித்து குமாரசாமி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து காருக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

    • இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட மர்மகும்பல் அதிகாலை வாகனத்தின் ‘சைடு லாக்கை’ உடைத்து திருடிச்செல்ல முயன்றுள்ளனர்.
    • உடைக்கும் போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து துரத்திய போது 3 பேரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூரை சேர்ந்தவர் சத்தியசீலன். ஆட்டோ டிரைவர். இவர் தனது இருசக்கர வாகனத்தை வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார்.

    இந்நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அதிகாலை வாகனத்தின் 'சைடு லாக்கை'உடைத்து திருடிச்செல்ல முயன்று ள்ளனர்.

    மற்றொருவர் அருகில் கிடந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் 'சைடு லாக்கை' உடைக்கும் போது சப்தம் கேட்டு அக்கம்ப க்கத்தினர் ஓடிவந்து துரத்திய போது 3 பேரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்று ள்ளனர்

    இந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியு ள்ள தை கொண்டு வேளாங்க ண்ணிபோலீ சில் சத்திய சீலன் புகார் அளி த்தார். அதன் பேரில் போலீசா ர்விசாரணை நடத்தி அதிரா ம்பட்டி னத்தை சேர்ந்த ஹரிஹரன், பட்டுக்கோ ட்டையை சேர்ந்த முகமது ரபிக், முத்துப்பேட்டையை சேர்ந்த பர்வீஸ் அகமது ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • பண்ருட்டி அருகே வாடகை சைக்கிள் நிறுத்தத்தில் புகுந்து 3 பேரை மர்ம கும்பல் தாக்கினர்.
    • தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரகோட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 55). இவர் அதே பகுதியில் வாடகை சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார்.  நேற்று இரவு இந்த சைக்கிள் ஸ்டாண்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த கிருஷ்ணராஜ் அவரது மனைவி காந்திமதி, அவரது மகன் ஹரிகரன் ஆகியோரை பயங்கரமாக தாக்கி அங்கிருந்த மோட்டார் பைக் திருடி சென்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பி ரண்டு சபியுல்லா, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப்-இன்ஸ் பெக்டர் ரங்கநாதன்மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்வி ரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்குமா? என்பது குறித்து விசாரித்தனர். கணவன், மனைவி, மகனை தாக்கி மோட்டார் பைக் திருடி சென்ற மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×